கள்ளக்குறிச்சி கலவரம்-காவல்துறையை குற்றம் சாட்டி வழக்கறிஞர்கள் சாலை மறியல்!!

கள்ளக்குறிச்சி கலவரம்-காவல்துறையை குற்றம் சாட்டி வழக்கறிஞர்கள் சாலை மறியல்!!

கள்ளக்குறிச்சியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து நெல்லை வழக்கறிஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் முன் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட அவர்கள், பள்ளி தொடர்பாக தவறான தகவலை அளித்த டிஜிபி மற்றும்  தமிழக அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நான்கு நாட்கள் காவல்துறைர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் போராட்டம் நடத்திய பின்னரே பள்ளியின் தாளாளர் செயலாளர் உள்ளிட்ட மூன்று பேரை கைது செய்துள்ளதாகவும் குற்றம் சாட்டினர். காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் கலவரம் நடந்திருக்காது என்றும் வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.