நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை விவசாயிகள் போராடுவது நியாயமானது தான்...கார்த்தி சிதம்பரம்

நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை விவசாயிகள் போராடுவது நியாயமானது தான் என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை விவசாயிகள் போராடுவது நியாயமானது தான்...கார்த்தி சிதம்பரம்

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய  காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறுகையில்,  மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டு அறிக்கையை மத்திய குழு விரைவாக சமர்ப்பித்தவுடன், தமிழகத்திற்கான நிவாரண தொகையை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என கூறினார்.

வேளாண் சட்டங்களை போராட்டத்தின் முலமாக வாபஸ் பெற செய்த அனைத்து விவசாயிகளுக்கும் வீர வணக்கம் செலுத்துவதாக தெரிவித்த அவர், நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறும் வரை விவசாயிகள் போராடுவது நியாயமானது தான் என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,  உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் விலை குறைந்து கொண்டு போகும் போது இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி கொண்டு இருக்கிறார்கள். இதற்கு காரணம் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கை தான் என குற்றம்சாட்டினார்.