இது என்ன கொடுமையா இருக்கு..! பாதை மூடல்...பிரசவ வார்டுக்கு பெண்கள் சுவர் ஏறி குதிக்கும் அவலம்!!

இது என்ன கொடுமையா இருக்கு..! பாதை மூடல்...பிரசவ வார்டுக்கு பெண்கள் சுவர் ஏறி குதிக்கும் அவலம்!!

தேனி மாவட்டம், கம்பம் அரசு மருத்துவமனையில், பிரசவ வார்டுக்கு செல்லும் பிரத்யேக பாதை மூடப்பட்டுள்ளதால், பெண்கள் ஆபத்தை பொருட்படுத்தாது சுவர் ஏறி குதிக்கின்றனர்.

24 மணி நேரமும் இயங்கும் கம்பம் அரசு மருத்துவமனையில், அருகில் உள்ள கிராமத்தினர் மற்றும் அண்டை மாநிலத்தை சேர்ந்த கேரள மக்களும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இங்குள்ள பிரசவ வார்டுக்கு செல்ல மருத்துவமனையின் பின்புறத்தில் பிரத்யேக வழி அமைக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா காரணமாக அந்த பாதை அண்மையில் மூடப்பட்டது.  

இதனால் மெயின் நுழைவாயிலிருந்து 400 மீட்டர் சுற்றி உறவினர்கள் மற்றும் நோயாளிகள் பிரசவ வார்டுக்கு செல்ல நேர்கிறது. இதனை தவிர்க்க சிலர், ஆபத்தையும் பொருட்படுத்தாது சுவர் ஏறி குதித்தும் வார்டுக்கு செல்லும் அவல  நிலை தொடர்கிறது.