6 மாதத்தில் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி - அமைச்சர் பேச்சு

6 மாதத்தில் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் வசதி -  அமைச்சர் பேச்சு

அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை

தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது இன்னும் ஆறு மாத காலத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வசதி வழங்கப்பட்டு விடும் என அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் செய்தியாளர்களுக்கு பேட்டி.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பெருந்தொற்றால் வாழ்க்கை துணையை இழந்த பெண்களுக்கு, யுனைடெட் வே ஆப் சென்னை என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் வாழ்வாதார மேம்பாட்டு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கொரோனா பெறுந்தொற்றால் வாழ்க்கை துணையை இழந்த 25 ஏழை பெண்களுக்கு, 11 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தகவல் தொழில் நுட்ப வியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வழங்கினார். இன்று இரண்டு பெண்களுக்கு இ சேவை மையம், தையல் இயந்திரம், ஆடு, மாடு, கிரைண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில்

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் வெறும் வாய் சவுடால் மட்டுமே விடுகின்றன - அண்ணாமலை குற்றச்சாட்டு!

சைபர் செக்யூரிட்டி கொள்கை தகவல்

சைபர் செக்யூரிட்டி கொள்கையில் சில திருத்தங்கள் வேண்டும் என்று பல தரப்பில் இருந்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது எனவே சைபர் செக்யூரிட்டி கொள்கையில் திருத்தங்கள் கொண்டு வருவதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் குறித்து ஆலோசனைகள் பல தரப்பினரிடம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது வெகுவிரைவில் தமிழக முதல்வரின் ஒப்புதலோடு திருத்தப்பட்ட சைபர் செக்யூரிட்டி கொள்கை தகவல் தொழில்நுட்பத் துறையின் மூலம் வெளியிடப்படும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா சிதறால் பகுதிக்கு மாற்றப்பட்டதாக கூறுவது உண்மை இல்லை நாகர்கோவில் அருகே கோணம் என்ற இடத்தில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது இதற்கான நடவடிக்கைகள் தமிழக அரசு அனுப்பப்பட்டுள்ளது அரசின் அனுமதி கிடைத்தவுடன் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்கப்படும் பின்னர் அது விரிவாக்கம் செய்யப்படும் தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது இன்னும் ஆறு மாத காலத்திற்குள் அனைத்து கிராமங்களுக்கும் இன்டர்நெட் சேவை வசதி வழங்கப்பட்டு விடும் என கூறினார்.