தமிழ்நாட்டில் தலிபானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களை கண்காணிக்கும் உளவுத்துறை...

தாலிபான்களுக்கு சமூக வலைதளங்கள் மூலம் ஆதரவு தெரிவித்த தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் விவரங்கள் மத்திய உளவுத்துறை போலீசார் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர். 

தமிழ்நாட்டில்  தலிபானுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டவர்களை கண்காணிக்கும் உளவுத்துறை...

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளதை தொடர்ந்து பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் சில நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும் ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதற்கு ஆதரவாக பல்வேறு நபர்கள் சமூக வலைதளங் கள் மூலம் கருத்து பதிவிட்டு வருகின்றன.

இந்தநிலையில் தாலிபான்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள தமிழகத்தை சேர்ந்தவர்களின் விவரங்களை மத்திய உளவுத்துறை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 5 சமூக வலைதள கணக்குகளை தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்வதாகவும், அவர்களின் கணக்கு விவரங்களை விசாரணை நடத்த மத்திய உளவுத்துறை உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது.