இன்ஸ்டா காதல்...கர்ப்பமான பள்ளி மாணவி...கைதான கல்லூரி மாணவர்.!

இன்ஸ்டா காதல்...கர்ப்பமான பள்ளி மாணவி...கைதான கல்லூரி மாணவர்.!

சென்னை கொரட்டூர் அடுத்த கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் இருவருக்கு, அடிக்கடி வயிறு வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை சிறுமி தனது பெற்றோரிடன் கூறியதையடுத்து, சிறுமியின் பெற்றோர் அவரை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். மருத்துவமனை சென்ற சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர், 2 மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். மருத்துவர்கள் கூறியதை கேட்டு சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் தகவல் அளித்தனர். தகவலின்பேரில் மருத்துவமனைக்கு வந்த காவலர்கள்,சிறுமியிடன் விசாரணை மேற்க்கொண்டனர்.

விசாரணையில் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவிக்கும், அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த டிப்ளமோ மாணவரான பார்த்தசாரதிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

அதுமட்டுமல்லாது மாணவர் பார்த்தசாரதி அவ்வபோது மாணவியை தனது பைக்கில் அழைத்து சென்று சென்னை முழுவதும் சுற்றி திரிந்ததாக சொல்லப்படுகிறது. ஒரு கட்டத்தில் மாணவரின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிறுமியை அழைத்து வந்து பாலியல் கொடுமை செய்ததும், அதில் தான் சிறுமி கர்ப்பம் ஆனதும் தெரியவந்தது.

மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், மாணவியை கர்ப்பமாக்கிய பார்த்தசாரதி என்கிற மாணவரை கைது செய்து திருவள்ளூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.