சிவகங்கையில் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா... 

சிவகங்கை மாவட்டம் சிவகங்கையில் நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தேசியகொடியை ஏற்றிவைத்து காவல்துறையினரின் அனிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

சிவகங்கையில் 75ஆம் ஆண்டு சுதந்திர தின விழா... 

நாட்டினுடைய 75வது சுதந்திர தினமானது இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆட்சியர் அலுவலக மைதானத்தில் 75வது சுதந்திர தின விழாவானது கொண்டாடப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தேசியகொடியை ஏற்றினார்.

உடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் செந்தில்குமார் உடன் இருந்தார். மாவட்ட ஆட்சியர் காவல்துறையினரின் அனிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து சுதந்திரபோராட்ட தியாகிகளுக்கு சால்வை அனிவித்து மரியாதை செலுத்தியதுடன் பல்வேறு துறைகள் சார்பில் 50 பயனாளிகளுக்கு 7,51,901 ரூபாய் மதிப்பிலான நலத்திட்டஙகளை வழஙகினார்.