தொடர் மழையால் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரிப்பு...

கர்நாடக நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரித்து அருவிகள் ஆர்ப்பரிக்க தொடங்கியுள்ளன.

தொடர் மழையால் ஒகேனக்கலுக்கு நீர் வரத்து அதிகரிப்பு...

 கர்நாடக மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளில் இருந்து உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கபினி அணையிலிருந்து 7 ஆயிரத்து 42 கன அடி நீரும்,  கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து 3 ஆயிரத்து 316 கன அடி   நீர் என மொத்தம்10 ஆயிரத்து 358 கன அடி உபரி நீர் தமிழக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கலில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால், அங்குள்ள அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் ஒகேனக் கலில் பரிசல் இயக்கவும், குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது .