தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா.. சென்னையில் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

தமிழ்நாட்டில் ஒரு வாரம் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா.. சென்னையில் 618 பேருக்கு கொரோனா பாதிப்பு!!

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதை அடுத்து, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியது. இதனையடுத்து, கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்தது.

இந்நிலையில், மீண்டும் கொரோனா பாதிப்பு  அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 2 ஆயிரத்து 283-ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, நேற்று 2 ஆயிரத்து 312ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒரேநாளில் 2 ஆயிரத்து 682 பேர் குணமடைந்து டிஸ்சாஜ் செய்யப்பட்ட நிலையில், கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயர் ரத்த அழுத்தம், நீரழிவு உள்ளிட்ட பல்வேறு இணை நோய்களுடன் கொரோனா தொற்றும் ஏற்பட்டு சென்னை ஓமந்தூராரர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருவள்ளூரைச் சேர்ந்த 71 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நீண்ட நாட்களுக்குப் பிறகு கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.