"முக்கிய அறிவிப்பு" மே 21ல் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.. ஆதார் கட்டாயம்

குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகள் மே 21ம் தேதி நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தலைவர் பாலச்சந்திரன் அறிவித்துள்ளார். 

"முக்கிய அறிவிப்பு" மே 21ல் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.. ஆதார் கட்டாயம்

சார் பதிவாளர், வருவாய் உதவியாளர், முதுநிலை ஆய்வாளர், துணை வணிகவரி அதிகாரி உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளுக்கான தேர்வினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. அந்தவகையில் நடப்பாண்டு குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு எப்போது நடைபெறும் என தேர்வர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இந்த நிலையில் சென்னை பாரிமுனையில் செய்தியாளர்களை சந்தித்த டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன், குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களுக்கான தேர்வு வருகிற மே 21ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மூன்று கட்டமாக நடைபெறும் இந்த தேர்வுக்கு,  தேர்வர்கள் வருகிற பிப்ரவரி 23ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், இதன் விரிவான தகவல்கள் மார்ச் மாதம் 3ம் தேதி வெளியிடப்படவுள்ள நிலையில், தேர்வு முடிவுகள் ஜூன் மாதம் வெளியிடப்படும் என கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது நடப்பாண்டு முதல் காலை தேர்வுகள் 9. 30 முதல் 12.30 வரையிலும், மாலை தேர்வுகள் மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும்  நடைபெறும் என தெரிவித்துள்ளார்.  நடப்பாண்டு முதல் தேர்வர்களுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.