”ஸ்டாலின், ஜெயலலிதா, எடப்பாடியெல்லாம் லோக்கல் பூதம்...மோடி இண்டர்நேஷனல் பூதம்” - சீமான்!

”ஸ்டாலின், ஜெயலலிதா, எடப்பாடியெல்லாம் லோக்கல் பூதம்...மோடி இண்டர்நேஷனல் பூதம்” - சீமான்!

நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு  வந்தால் முதலில் அனைத்து மலைகளிலும் கோயில் கட்டுவோம் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.


புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், அதிகப்படியான கல்குவாரிகள் உள்ள இடம் புதுக்கோட்டை தான், அதிகமாக மணல் திருட்டு நடைபெறுவதும் புதுக்கோட்டை தான் என்று கூறியவர், புதுக்கோட்டை என்பதை எடுத்துவிட்டு திருட்டுக்கோட்டை என்று மாற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், முருகன் மலையை யாராலும் திருட முடியாது, ஏனெனில் அங்கு கோவில் உள்ளது. நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் அனைத்து மலைகளிலும் முதலில் கோவிலை கட்டுவோம் என்று பொதுமக்கள் இடம் உரையாற்றினார்.

இதையும் படிக்க : ஆளாளுக்கு அரசியல் பேசும் போது, ஏன் ஆளுநர் அரசியல் பேசக்கூடாது? தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி!

பின்னர் பொதுமக்களிடம் பாட்டி கூறிய கதை என்று பேச துவங்கிய சீமான், ஒரு ஊரில் பெரிய மலை முழுங்கி மகாதேவன் இருக்கிறான் என்று கூறினார். நானும் கேட்டேன் அது எப்படி மலையை முழுங்க முடியும் என்று, ஆனால் பாட்டி கூறியதோ அது ஒரு பெரிய பூதம் என்றும், அதற்கு பெரிய வாய் உள்ளது என்றும் கூறினார் அப்போது நான் நம்பவில்லை. 

ஆனால் தற்போது, ஸ்டாலின் ஒரு பூதம், எடப்பாடி பழனிச்சாமி ஒரு பூதம், ஜெயலலிதா ஒரு பூதம், விஜயபாஸ்கர் என்கிற ஒரு பெரிய பூதம் உள்ளது என்று தெரிந்து கொண்டேன். அப்போது, கூட்டத்தில் இருந்த நாம் தமிழர் கட்சியினர் மோடி என்ன என்று கேட்கும் போது, மோடி பூதத்திற்கெல்லாம் பூதம் என்றும், இண்டர்நேஷனல் பூதம் என்றும் சிரித்துக் கொண்டே சீமான் கூறினார்.