வன நிலம் வழங்க வேண்டும் என்றால் அதற்கு உரிய மாற்று இடம்...!!

வன நிலம் வழங்க வேண்டும் என்றால் அதற்கு உரிய மாற்று இடம்...!!

பவானிசாகர் பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வன நிலம் வழங்க வேண்டும் என்றால் அதற்கு உரிய மாற்று இடம் வழங்க வேண்டும் என அமைச்சர் மதிவேந்தன் கூறியுள்ளார். 

சட்டப்பேரவையில் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வன நிலத்தை அளிக்க வேண்டியது குறித்து அதிமுக உறுப்பினர்கள் செங்கோட்டையன், தனபால், கே.சி. கருப்பண்ணன், பண்ணாரி ஆகியோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.  தீர்மானத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், பண்ணாரி அம்மன் கோவிலுக்கு 5 ஏக்கர் வனத்துறை நிலத்தை வழங்க வேண்டும் என்றும், அதற்கு மாற்று இடம் வழங்க, தயாராக இருக்கின்றார்கள் என்றும் கூறினார். 

இதற்கு பதிலளித்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஏற்கனவே 8புள்ளி 9 ஹெக்டேர் வனத்துறை இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், வன நிலத்திற்கு பதிலாக வழங்கப்படும் நிலம் செங்குத்தாக இருப்பதால் மரம் நடுவதற்கு ஏற்றதாக இல்லை என்றும், தெரிவித்தார்.  மேலும் வனத்துறைக்கு உரிய மாற்று இடம் வழங்கினால் வன நிலம் வழங்குவது குறித்து கூட்டு ஆய்வு செய்யப்படும் எனவும் பதிலளித்தார்.

இதையும் படிக்க:  தமிழர்கள் அல்லாத ஐபிஎல் அணி... தடை செய்யப்பட வேண்டும்...!!!