ராவண கோட்டத்தில் காமராஜர் அவதூறுகளை நீக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் - நாடார் பேரவை

ராவண கோட்டத்தில் காமராஜர் அவதூறுகளை நீக்கவில்லை என்றால் முற்றுகை போராட்டம் - நாடார் பேரவை

தமிழ்நாடு நாடார் பேரவையின் தூத்துக்குடி மாவட்ட சிறப்பு ஆலோசனைக் கூட்டம் சேர்வைக்காரன் மடத்தில் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு ரவிசேகர் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.பி. மாரியப்பன், பொருளாளர் மில்லை தேவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு நாடார் பேரவையின் மாநில தலைமை நிலைய செயலாளர் எம்.ஆர்.சிவக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக இக்கூட்டம் நடைபெற்று வருகிறது என அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | விடுதலை பார்ட் -2 அக்டோபர் வெளிவரும் - நடிகர் கொடுத்த அப்டேட்

மதுபான கடைகளுக்கு அங்கீகாரம்

இக்கூட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை முழுமையாக அகற்றப்பட வேண்டும் என இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்த அவர், மேலும் தமிழகத்தில் மதுபான கடைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் தமிழக அரசு பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கல்லை அரசு தடை செய்திருக்கிறது. பனைமரத் தொழிலாளர்கள் முன்னேற்றத்திற்காக கல்லை அவர்களை இறக்கி விற்றுக் கொள்வதற்கு தமிழக அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றார். தமிழக முதல்வர் சட்டசபையில் அறிவித்தபடி நியாய விலைக் கடைகளில் பனங்கருப்பட்டிகள் விற்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

.திரையரங்கம் முன்பு முற்றுகையிடும் போராட்டம் 

காமராஜரை பற்றியும் நாடார் சமுதாயத்தை பற்றியும் அவதூறு பரப்பும் தலைவர்களுக்கு தமிழ்நாடு நாடார் பேரவை சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்தவர்.அண்மையில் வெளியான ராவண கோட்டம் திரைப்படத்தில் காமராஜர் குறித்து அவதூறான கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது என்றார். தொடர்ந்து இப்படத்தில் இக்காட்சிகளை நீக்கம் செய்யவில்லை என்றால் இந்த திரைப்படம் திரையிடும் திரையரங்கம் முன்பு முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என அவர் தெரிவித்தார்.