ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - பாதிக்கப்பட்ட பெண் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜர்

சென்னை ஐஐடியில் தாழ்த்தப்பட்ட பெண் பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஆஜராகி வாக்கு மூலம் அளித்துள்ளார்.

ஐஐடி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - பாதிக்கப்பட்ட பெண் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் ஆஜர்

சென்னை ஐடியில் பட்டியிலின பெண் பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கு மற்றும் தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் விசாரணை கைதி விக்னேஷ் ஆகியோர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக,

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவர் அருண் ஹெல்டர் தலைமையில் விசாரணை நடைப்பெற்று வருகிறது.

இதில், சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் ஆணையர் கண்ணன், மாநில மனித உரிமை துறை கூடுதல் காவல் துறை இயக்குனர் செந்தாமரைக் கண்ணன் ஆகியோர் நேரில் அஜராகி விளக்கமளித்தனர்.

விசாரணை கைதி சந்தேக மரணம் அடைந்ததில் காவல் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை தொடர்பாகவும், மரணத்திற்கு பிறகு காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பான ஆவணங்களை ஆணையத்திடம் காவல் ஆணையர் முன் வைத்ததாகவும் தெரிகிறது.

அதன் பின்னர் ஐ. ஐ.டி ஆராய்ச்சி மாணவி கொடுத்த பாலியல் வன்கொடுமை புகாரில் எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பாகவும் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை ஐடியில் தாழ்த்தப்பட்ட பெண் பாலியியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பதிக்கப்பட்ட பெண் தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.