ஒருநாள் ஊதியம் வழங்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்.... எதற்காக?!

ஒருநாள் ஊதியம் வழங்கும் ஐஏஎஸ் அதிகாரிகள்.... எதற்காக?!

நம்ம ஸ்கூல் பவுண்டேசனுக்கு ஒரு நாள் ஊதியத்தை ஐஏஎஸ் அதிகாரிகள் வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

முன்னாள் மாணவர்கள் மூலம் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் ‘நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன்' திட்டத்திற்கு ஒரு நாள் ஊதியத்தை வழங்குவதாக ஐஏஎஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அரசுப் பள்ளிகளில் பயின்று, தற்போது பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த பதவியில் இருக்கும் முன்னாள் மாணவர்கள், தொழிலதிபர்களாக உள்ள முன்னாள் மாணவர்கள், அரசுப்பள்ளிகளை மேம்படுத்த உதவி வழங்கும் திட்டமாக  நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம், அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து, சுற்றுச்சுவர் அமைத்தல், வர்ணம் பூசுதல், இணையதள வசதி, சுகாதாரமான கழிப்பறைகள், ஆய்வகங்கள், நூலகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட உள்ளன.

இத்திட்டத்திற்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில் மார்ச் மாத ஊதியத்திலிருந்து ஒரு நாள் ஊதியத்தினை வழங்குவதாக தமிழ்நாடு ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் அறிவித்துள்ளனர்.

இதையும் படிக்க:  யோகி பாபு படத்துக்கு தடை விதித்த நீதிமன்றம்...!!!