மக்களை முன்னேற்றும் அரசியலை முன்னெடுப்பேன்... துரை வைகோ பேட்டி...

வலதுசாரி சிந்தாந்தத்தை புறந்தள்ளிவிட்டு மக்களை முன்னேற்றும் அரசியலை முன்னெடுப்பேன் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக செயலாளராக பொறுப்பேற்றுள்ள துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மக்களை முன்னேற்றும் அரசியலை முன்னெடுப்பேன்... துரை வைகோ பேட்டி...

மதிமுக-வின் தலைமை கழக செயலாளராக வைகோ மகன் துரை வைகோ இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று கொண்டார். பின்பு சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உடன் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இருந்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, துரை வைக்கோவிற்கு பொறுப்பு கொடுக்கபட்டதில் கட்சியில் 100% ஒரு துளியும் அதிருப்தி இல்லை என்றார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த துரை வைகோ, வலதுசாரி சிந்தாதத்தை புறந்தள்ளிவிட்டு மக்களை முன்னேற்றும் அரசியலை நான் முன்னெடுப்பேன் என கூறினார்.