அன்பளிப்பில் பெயர் போட்டதால் வந்த பிரச்சனை... ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராமம்... மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்...

சீர்காழி அருகே 6 மீனவ குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்தது தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் 6 வாரத்தில் பதில் அளிக்க மாநில மனித உரிமை ஆணையம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

அன்பளிப்பில் பெயர் போட்டதால் வந்த பிரச்சனை... ஊரைவிட்டு ஒதுக்கி வைத்த கிராமம்... மாவட்ட ஆட்சியருக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்...

சீர்காழி அருகே கீழமூவர்க்கரை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் நிலவன் இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார். இவருடன் கர்ணன், ஜெயக்குமார், மாதவன், முரளி, ராஜா உள்ளிட்ட 5 பேர் உடன்பிறந்தவர்கள் ஆவர்கள். 

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அப்பகுதியில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு வெண்கலத்தாலான படிக்கட்டு அமைத்து  தனது பெயர் பொறித்து  அன்பளிப்பு செய்துள்ளார். இது தொடர்பாக கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் பெயர் பொறித்து வைக்கக்கூடாது என அப்பகுதியில் உள்ள முக்கியஸ்தர்கள் கூட்டத்தில் கூறியுள்ளனர்.

 

இதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக நிலவன் , கர்ணன், விஜயகுமார் உள்ளிட்ட 6 குடும்பங்களை  ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர். இந்நிலையில் கோயில் திருவிழாவில் ஒலிபெருக்கி மூலம் ஆறு குடும்பங்களின் பெயரைப் படித்து ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாகவும் இவர்கள் கோயில் திருவிழாவில் கலந்து கொள்ள கூடாது என தெரிவித்துள்ளனர்.

இதனால் மனமுடைந்த ஆறு குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் சீர்காழி வட்டாட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் சீர்காழி அருகே மீனவ சமுதாயத்தை சேர்ந்த 6 குடும்பங்களை ஒதுக்கி வைத்த தொடர்பாக செய்திகள் வெளியானதை அடுத்து தாமாக முன் வந்து மாநில மனித உரிமை ஆணையம் ஆறு வாரத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.