நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.!!!

தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும், நாளை முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு.!!!

கொரோனா பாதிப்பு குறைந்ததை தொடர்ந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அளிக்க வேண்டும் என பலதரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியும் விடுமுறை அளிக்கப்படும் என உறுதி அளித்திருந்தார்.

இந்த நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறையைத் தொடர்ந்து, 27ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை கட்டாய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு மற்றும் 2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால், ஜனவரி 3ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.