முதுமலை யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கமா?  

முதுமலை  காப்பகத்திலுள்ள யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கம்  இல்லை என ஆய்வு முடிவில் வெளியாகியுள்ளதாக வனதுறையினர் தெரிவித்துள்ளனர்.

முதுமலை யானைகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் தாக்கமா?   

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் கோட்டூர் அருகே காப்புகாடு பகுதியில் யானைகள் முகாம் உள்ளது. வனப்பகுதிகளில் பிடிக்கப்படும் யானைகள், தாயை இழந்து தவிக்கும் குட்டி யானைகள் இங்கு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது, குட்டிகள் உள்பட 50க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு உள்ளன.

இந்நிலையில், இந்த முகாமில் உள்ள யானைகளை ஹெர்ப்பிஸ் என்ற வைரஸ் தாக்கி வருவது சமீபத்தில் கண்டறியப்பட்டது. கடந்த வாரம் ஒன்றரை வயதுடைய குட்டி என்ற பெயரிடப்பட்ட பெண் யானை குட்டி வைரஸ் தாக்கி இறந்தது. இதுபற்றி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 3 யானை குட்டிகளுக்கு ஹெர்ப்பிஸ் வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.

இந்த நிலையில் முதுலையில் உள்ள யானைகளுக்கு நடத்தப்பட்ட கொரோனா சோதனையின் போது ஹெர்ப்பிஸ் வைரஸ் ட்யூபர்க்ளோசஸ் போன்ற நோய்களுக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உத்தரபிரதேசத்தில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பட்ட நிலையில்  முடிவுகளில் தொற்று இல்லை என அதிகார அறிவிப்பை வனத்துறை தெரிவித்துள்ளது.