தமிழகத்தில் கனமழை.. அதுவும் தொடர்ந்து 3 நாட்களுக்கு - ஷாக் கொடுத்த வானிலை ஆய்வும் மையம்!!

தொடர்ந்து 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வும் மையம்  தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கனமழை.. அதுவும் தொடர்ந்து 3 நாட்களுக்கு -  ஷாக் கொடுத்த வானிலை ஆய்வும் மையம்!!

தமிழக பகுதிகளில் இன்று கனமழைக்கு வாய்ப்பு:

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், நாமக்கல் உட்பட 12 மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

தமிழக பகுதிகளில் நாளை கனமழைக்கு வாய்ப்பு:

நீலகிரி, கரூர், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை உட்பட 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக பகுதிகளில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு:

பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை உட்பட 18 மாவட்டங்களில், நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மிதமான மழை:

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

சென்னை மழை:

சென்னையை பொறுத்தவரை  நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் பகுதிகள் மற்றும் கர்நாடகா கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.