34வது மெகா தடுப்பூசி முகாம்...கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கிய உணவு பெட்டகம்!

34வது மெகா தடுப்பூசி முகாம்...கர்ப்பிணி பெண்களுக்கு  ஆரோக்கிய உணவு பெட்டகம்!

திருப்பத்தூரில் 34வது மெகா தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் கர்ப்பிணி பெண்களுக்கு  ஆரோக்கிய உணவுப் பெட்டகம் வழங்கியுள்ளார்.

மெகா தடுப்பூசி முகாம்:

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள  இடையம்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 34வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதனுடன் இயற்கை சார்ந்த ஆரோக்கிய உணவுகள் குறித்த கண்காட்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். தொடர்ந்து, தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த அமைச்சர், முகாமுக்கு வருகை  தந்த கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கிய உணவு பெட்டகம் வழங்கினார்.

மேலும் படிக்க: https://www.malaimurasu.com/posts/tamilnadu/Synthetic-drugs-caught-in-vehicle-checks

விபத்துக்களை தடுக்க நடவடிக்கை:
 
இதேபோல் ஆம்பூர் அடுத்த அய்யனூர் பகுதியில் உள்ள தனியார் காலணியில் தடுப்பூசி முகாமை தொடக்கி வைத்தார். அதன்பின்  செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தேசிய நெடுஞ்சாலைகளில் விபத்துகளை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.