துணி காயப்போடும் போது பால்கனி இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி!

துணி காயப்போடும் போது பால்கனி இடிந்து கீழே விழுந்ததில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

துணி காயப்போடும் போது பால்கனி இடிந்து விழுந்ததில் மூதாட்டி பலி!

துணி காயப்போடும் போது பால்கனி இடிந்து கீழே விழுந்ததில் மூதாட்டி சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மயிலாப்பூர் பக்தவச்சலம் சாலையில் உள்ள சுமந்த் குடியிருப்பில் வசித்து வருபவர் பத்மஜா தேவி. மூதாட்டியான இவர் வீட்டிலேயே தங்கி சிறு வேலைகள் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று பத்மஜா துவைத்த துணியை இரண்டாம் மாடியில் உள்ள பால்கனியில் காயப்போடும் போது திடீரென பால்கனி இடிந்து விழுந்ததில் தவறி விழுந்து  படுகாயம் அடைந்தார்.

படுகாயமடைந்த மூதாட்டியை அருகிலிருந்த குடியிருப்பு வாசிகள் சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இறந்த உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது தொடர்பாக மயிலாப்பூர் போலீச்சார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.