கொரோனா தடுப்பில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது,..! பாராட்டித்தள்ளிய ராமதாஸ்.! 

கொரோனா தடுப்பில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுகிறது,..! பாராட்டித்தள்ளிய ராமதாஸ்.! 

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளதென பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார். 

நடந்துமுடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று ஆட்சியமைத்தது. அதன்பின்னர் தீவிரமாக கொரோனா பணியில் இறங்கிய தமிழக அரசின் செயல்பாடுகளால் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. அரசின் இந்த செயல்பாடுகளுக்கு பல்வேறு தரப்பினர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். அதேபோல தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளதென பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டியுள்ளார்.


இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்தாலும், தினசரி சோதனைகளின் எண்ணிக்கை 1 புள்ளி 60 லட்சத்திற்கும் கீழ் குறையாமல் தொடர்வதாகவும், கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு இது சரியான நடவடிக்கை எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனா பரவல் தீவிரமடைகிறதா? என்பதை கண்காணிப்பதற்கான சிறந்த வழிமுறை சோதனைகள் தான் என்பதால், தமிழ்நாட்டில் கொரோனா சோதனைகளின் எண்ணிக்கை இதே அளவில் தொடர வேண்டும் என்றும், அவை குறைக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.