ஓட்டுநரின் கவனக்குறைவால் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து...வைரலாகும் சிசிடிவி காட்சிகள்...!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் ஓட்டுநர் கவனக்குறைவால் அரசு பேருந்து ஒன்று தடுப்பில் மோதும் சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஓட்டுநரின் கவனக்குறைவால் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளான அரசு பேருந்து...வைரலாகும் சிசிடிவி காட்சிகள்...!

திருச்சியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து ஒன்று அதிகாலை நாமக்கலுக்கு சென்று கொண்டிருந்தது.   இந்த பேருந்தை ஈரோடுமாவட்டம் கோபி போக்குவரத்து கிளையை சேர்ந்த ஓட்டுநர் சக்திவேல் என்பவர் ஓட்டிவந்துள்ளார். பேருந்து பள்ளி பாளையம் அருகே வந்துக்கொண்டிருந்த போது ஓட்டுநர் சக்திவேல் தூங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் பேருந்து  தீடிரென கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடுவே இருந்த தடுப்பின் மீது மோதியது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த முதியவர் உள்பட 5 பேர் காயமடைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் காயமடைந்தவர்களை பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதன் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது..