அதிகாலையில் வெளுத்து வாங்கிய மழை...வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்...மகிழ்ச்சியில் சென்னை வாசிகள்!

அதிகாலையில் வெளுத்து வாங்கிய மழை...வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல்...மகிழ்ச்சியில் சென்னை வாசிகள்!

சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை நல்ல மழை பெய்ததால் குளிர்ச்சியான நிலவி வருகிறது. 

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. 

இதையும் படிக்க : ”நாடாளுமன்ற தோ்தலில் மாற்றம் ஏற்படுத்தினால் நீட் தோ்வை ரத்து செய்யலாம்" - அப்பாவு

இந்நிலையில் சென்னையில் திடீரென இன்று அதிகாலையில் நல்ல மழை பெய்தது.   அந்தவகையில் பட்டினம்பாக்கம், காமராஜர் சாலை, அண்ணா சாலை, ஆழ்வார்பேட்டை, தேனாம்பேட்டை, ஆயிரம் விளக்கு, சேப்பாக்கம் திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஓட்டேரி, பெரம்பூர், டவுட்டன்,திருவிக நகர் உள்ளிட்ட வட சென்னை பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. அதிகாலை 3 மணிக்கு மேல் தொடங்கிய மழை, ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்து நல்ல மழையாக பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியுள்ளது.