தங்க தாரகையா?.. ஈபிஎஸ், ஓபிஎஸ் -க்கு எதிராக களமிறங்கிய சசிகலா ஆதரவாளர்கள்!!

ஒற்றை தலைமை ஏற்க சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள்.

தங்க தாரகையா?.. ஈபிஎஸ், ஓபிஎஸ் -க்கு எதிராக களமிறங்கிய சசிகலா ஆதரவாளர்கள்!!

அதிமுகவின் ஒற்றை தலைமையை ஏற்க சசிகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாகவும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகவும் தொண்டர்கள் சுவரொட்டிகள் ஒட்டி ஆதரவை தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அதிமுக நகர் மாணவரணி இணை செயலாளர் சிவாதேவன்.. ஜெயலலிதா, சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படங்களுடன் தங்கத் தாரகையின் தியாக தங்கையே மற்றும் அம்மாவால் அடையாளம் காட்டிய தர்ம தலைவரே என சசிகலா மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் ஒன்றுகூடி ஒற்றை தலைமை ஏற்க வாருங்கள் என சசிகலாவுக்கு ஆதரவாக பரமக்குடி நகர் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.