சிவப்பு பட்டு உடுத்தி தங்கத்தேரில் உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மன்...!

ஆவணி மாதம் வெள்ளிக்கிழமையான நேற்று, காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் தங்கத் தேர் உற்சவம்.

சிவப்பு பட்டு உடுத்தி தங்கத்தேரில் உலா வந்த காஞ்சி காமாட்சி அம்மன்...!

நகரேஷூ காஞ்சி என போற்றப்படும், காஞ்சிபுரத்தில் உலக பிரசித்தி பெற்ற சக்தி தலங்களில் ஒன்றான காஞ்சி காமாட்சி அம்மன் ஆலயத்தில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையான நேற்று, தங்கத் தேர் உற்சவம் நடைபெற்றது.

தங்கத் தேர் உற்சவத்தை ஒட்டி காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு, சிவப்பு பட்டு உடுத்தி திருவாபரணங்கள், அணிவித்து சம்பங்கி பூ, மல்லிகைப் பூ மாலைகள் சூட்டி மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கத் தேரில் லட்சுமி, சரஸ்வதி தேவிகளுடன் காமாட்சி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காமாட்சி அம்மன் எழுந்தருளிய தங்க தேரினை திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, வடம்பிடித்து இழுத்து சென்று வழிபட்டனர்.