சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மெகா தடுப்பூசி முகாமை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் ஆய்வு...

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மெகா தடுப்பூசி முகாம்களில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

சென்னையில் அமைக்கப்பட்டுள்ள மெகா தடுப்பூசி முகாமை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் ஆய்வு...

பொதுமக்களிடையே கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தி, அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதை உறுதி செய்யும் வகையில், இன்று தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. அதன்படி சென்னை மாநகராட்சி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாம்களை, தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு நேரில் ஆய்வு செய்தார். அவ்வகையில், சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி முகாமில் நேரில் ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தடுப்பூசி செலுத்தி கொண்டால் மட்டுமே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் என்ற காரணத்தால், இது போன்ற பெரிய அளவிலான முகாம்கள் நடத்தப்படுவதாக தெரிவித்தார். தமிழகம் முழுவதும் இன்று அமைக்கப்பட்டுள்ள முகாம்களில், அதிகளவிலான மக்கள் தடுப்பூசி செலுத்த ஆர்வமாக வரும் பட்சத்தில், வாரம் ஒரு முறை இது போன்ற பெரிய அளவிலான முகாம்கள் நடத்தப்படும் எனவும், அக்டோபர் இறுதிக்குள் தமிழகத்தில் தடுப்பூசி முகாம்கள் அதிகப்படுத்தப்பட்டு, அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார். அதனை தொடர்ந்து நங்கநல்லூர், அண்ணா பல்கலைக்கழகம், அடையாறு மற்றும் கோட்டூர்புரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.