மீண்டும் வழங்கப்படும் இலவச டி.வி...

10 ஆண்டுகள் கழித்து மீண்டும் வழங்கப்படும் இலவச தொலைக்காட்சி பெட்டிகள்

மீண்டும் வழங்கப்படும் இலவச டி.வி...
கடலூர் மாவட்டம் செம்மண்டலம் சமுதாய நலக் கூடத்தில் கடந்த 10 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ள அரசின் இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
 
கடந்த திமுக ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கப்பட்டு வந்தன. அப்போது,  கடலூர் அருகேயுள்ளா செம்மண்டலம் பகுதியில் மக்களுக்கு வழங்குவதற்காக 7 ஆயிரத்து 619 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் அங்குள்ள சமுதாய நலக் கூடத்தில் வைக்கப்பட்டன.
 
இதனை தொடர்ந்து 2011ஆம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் விதிமுறையின் காரணமாக தொலைக்காட்சி பெட்டிகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில் அரசியல் மாற்றம் காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக சமுதாய நலக் கூடத்தில் வைக்கப்பட்டுள்ள இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை வேறு இடத்துக்கு மாற்றி, மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.