அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவளித்த தமிழக ஆளுநருக்கு தக்க பதிலடி கொடுத்து பேசினார் ப.சிதம்பரம்!

அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவளித்த தமிழக ஆளுநருக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் பதிலளித்துள்ளார். 

அக்னிபத் திட்டத்துக்கு ஆதரவளித்த தமிழக ஆளுநருக்கு தக்க பதிலடி கொடுத்து பேசினார் ப.சிதம்பரம்!

அக்னிபாத் திட்டத்துக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பி வரும் நிலையில், இளைஞர்களின் நிலையை உயர்த்தும் திட்டம் அக்னிபத் என ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னதாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய அரசின் மோசமான நிலைப்பாட்டால் உருவாக்கப்பட்டுள்ள மற்றும் முறையாக வகுக்கப்படாத திட்டம் அக்னிபத் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், இத்திட்டம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

அக்னிபத்துக்கு எதிரான வன்முறைக்கு பேச்சுவார்த்தையின் மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என குறிப்பிட்டுள்ள அவர், போராட்டத்தில் ஈடுபடுவோர் வன்முறையில் ஈடுபடுவதைக் கைவிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.