50 கோடி செலவு செஞ்சாலும் அ.தி.மு.க. ஜெயிக்க முடியாது... முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை...

50 கோடி செலவு செஞ்சாலும் அ.தி.மு.க. ஜெயிக்க முடியாது என்று முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி. சண்முகம் எச்சரித்துள்ளார்.

50 கோடி செலவு செஞ்சாலும் அ.தி.மு.க. ஜெயிக்க முடியாது... முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் எச்சரிக்கை...

விழுப்புரம் தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக கட்சியின் கழக அமைப்பு தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் சி. வி. சண்முகம் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில்  பேசிய சி.வி. சண்முகம் அதிமுகவின் உட்கட்டமைப்பினை உறுதிபடுத்தவில்லை என்றால் 50 கோடி செலவு செய்தாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது எனவும், இன்னும் நாலரை ஆண்டுகள் உள்ள நிலையில் பஞ்சாயத்து பேசி கால நேரத்தை வீணாக்காமல், அனைவரும் ஒருமனதாக ஒன்றிணைந்து செயல்பட்டு நிர்வாகிகளை தேர்தெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியுள்ளார்.

அ.தி.மு.க.வின் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் முன்னாள் அமைச்சர்கள் ஓ. எஸ். மணியன், ஜீவானந்தம் ஆகியோர் கலந்து கலந்துகொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.