திருச்சி விமான நிலையத்தில் 15 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்...!

திருச்சி விமான நிலையத்தில் 15 லட்சம் மதிப்புள்ள  வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்...!

திருச்சி விமான நிலையத்தில் 15 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை  சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். 

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல  இருந்த விமான பயணிகளை  சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டா். அப்போது, அபூபக்கர் சித்திக் என்ற பயணி தனது உடல்  மற்றும் உடைமைகளில் இந்திய மதிப்பில் 15 லட்சம் மதிப்புள்ள 18 ஆயிரம் அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.

திருச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்ல இருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்ட போது அபூபக்கர் சித்திக் என்ற பயணி தனது உடல் மற்றும் உடைமைகளில் இந்திய மதிப்பில் ரூபாய் 14.74 லட்சம் மதிப்புள்ள 18,000 அமெரிக்க டாலர்களை மறைத்து வைத்து கடத்தியது தெரியவந்தது.

இதனையடுத்து வெளிநாட்டு கரன்சிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க   |  சோழர்களின் பெருமையை உணர்த்தும் உலகத் தர அருங்காட்சியகம்... 2 இடங்கள் தேர்வு!!