சங்கராபுரம் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 5 பேர் பத்திரமாக மீட்பு....

கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே  ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட ஐந்து வீரர்களை தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

சங்கராபுரம் அருகே ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 5 பேர் பத்திரமாக மீட்பு....

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பாவளம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ், ஏழுமலை, கார்த்திகேயன், சூர்யா, பெரியசாமி, ஆகியோர் அரசம்பட்டு மணிமுத்தாற்றில் ஆற்றில் மீன் பிடித்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது கல்வராயன் மலையில் பெய்த கன மழை காரணமாக, திடீரென்று மணிமுக்தா ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கிய ஐந்து பேரும் ஒருவரை ஒருவர் கையைப் பிடித்துக் கொண்டு ஆற்றின் நடுவிலுள்ள ஒரு திட்டில் ஏறி நின்றுகொண்டு காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் கொடுத்துள்ளனர்.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், சங்கராபுரம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் கயிறு மூலம் ஒவ்வொருவரையும் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.