ஏ.சி இயந்திரத்தில் மின்சாரம் கசிந்து தீ விபத்து... மனைவி தீயில் கருகி உயிரிழப்பு...

மதுரையில், ஏ.சி இயந்திரத்தில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, கணவன்- மனைவி தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஏ.சி இயந்திரத்தில் மின்சாரம் கசிந்து தீ விபத்து... மனைவி தீயில் கருகி உயிரிழப்பு...

மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்தவர் சக்திகண்ணன். இவருக்கு மனைவி சுபா மற்றும் 17 வயதில் மகள் மற்றும் 15 வயதில் மகன் ஆகியோர் உள்ளனர்.  நேற்றிரவு 4 பேரும் சாப்பிட்டு வீடு தூங்கச்சென்றுள்ளனர்.

இதில் சக்திகண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகியோர் மேல் அறையில் தூங்கியதாக கூறப்படுகிறது.  நள்ளிரவு அந்த அறையில் இருந்த ஏ.சி இயந்திரத்தில் திடீரென மின்சாரம் கசிந்து, கரும்புகை வெளியேறியது. இதில் சக்திக்கண்ணன் மற்றும் சுபா ஆகியோர் உடலிலும் தீப்பரவி அவர்கள், வெளியே வர முடியாமல் அலறி துடித்துள்ளனர். சத்தம் கேட்டு எழுந்த அவரது மகன் உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து இருவரையும் சடலமாக மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், ஏ.சி இயந்திரத்தில் இருந்து மின்சாரம் கசிந்ததால் இந்த தீவிபத்து நேர்ந்ததா அல்லது தற்கொலை முயற்சியாக அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரிக்கின்றனர்.  வீட்டு அறையில் உறங்கிகொண்டிருந்த தம்பதியினர் தீ விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.