மெட்ரோ ரயிலில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்!!

கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சென்னை மெட்ரோ ரயிலில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ ரயிலில் இன்று முதல் முகக்கவசம் அணிவது கட்டாயம்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொற்று பரவல் உயர்ந்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என, மெட்ரோ நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் புதிதாக 2 ஆயிரத்து 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக தலைநகர் சென்னையில், ஆயிரத்து 62 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு தற்போது 17 ஆயிரத்து 717 பேர் சிகிச்சையில் இருக்கும் நிலையில், உயிரிழப்பு ஏதும் இல்லை என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.