பந்தல் கம்பு தட்டியதில் பைக் சறுக்கி காருக்கு அடியில் சென்ற பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!!

கோவில் நிகழ்ச்சிக்கு பந்தல் போட சாலையின் குறுக்கே பந்தல் கம்பை எடுத்து வந்த போது இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது தட்டி காருக்குள் விழுந்த பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

பந்தல் கம்பு தட்டியதில் பைக் சறுக்கி காருக்கு அடியில் சென்ற பரபரப்பு சிசிடிவி காட்சிகள்!!

கன்னியாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் அருகே மாடசுவாமி கோவில் திருவிழா நடந்து வருகிறது. இந்த திருவிழாவிற்காக பந்தல் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.. தொழிலாளர்கள் வாகனத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட பந்தல் காம்புகளை இரங்கி கொண்டு இருந்தனர்.

இந்நிலையில், அதில் நீண்ட பந்தல் கம்பை இரண்டு பேர் தூக்கி சென்றனர். பந்தல் கம்பு நீளமாக இருந்தாதான் காரணமாக சாலை முனை வரை சென்றது.. அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் மீது அந்த கம்பு பட்டது.

இதில் நிலை தடுமாறி வாகனம் சரிந்து விழுந்து மறுபுறம் வந்த காரை நோக்கி சென்றது. இதனை சற்று எதிர்பாராத கார் ஓட்டுநர் பட்டுனு பிரேக் போட்டார். இதில் இரு சக்ர வாகனம் காருக்கு அடியில் சிக்கி கொண்டது.

இதில் இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.. இந்த விபத்து குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.