ரூட்டுதல பிரச்சனையால் பரபரப்பு...கல்லூரி மாணவர்களுக்கிடையே தகராறு...!

சென்னை அடுத்த மாதவரத்தில் ரூட்டுதல பிரச்சனையில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூட்டுதல பிரச்சனையால் பரபரப்பு...கல்லூரி மாணவர்களுக்கிடையே தகராறு...!

சென்னை அடுத்த மாதவரம் கணக்கன் சத்திரம் பகுதியில் நேற்று காலை 10 மணி அளவில் இரு கல்லூரியை சேர்ந்த  மாணவர்களிடையே ரூட்தல பிரச்சினையில் தகராறு மூண்டது. இதில் ஒரு கல்லூரி மாணவர்கள் மற்றொரு கல்லூரி மாணவர்களை ஒருவருக்கொருவர் கத்தியால் தாக்கிகொண்டனர்.

இந்த தாக்குதலில் தியாகராஜர் கல்லூரியில் பிஏ முதலாம் ஆண்டு பயிலும் நிர்மல் குமார்  என்ற  மாணவருக்கு தலையில் வெட்டுக்காயம் ஏற்பட்டது. அதனைதொடர்ந்து மாணவரை மீட்ட அங்கிருந்தவர்கள் அவரை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தனர்,

நேற்று காலை சுமார் 10 மணியளவில் மாதவரம் அடுத்த கனகசத்திரம் பஸ்நிலையம் அருகே தீடீரென நடந்த இந்த சம்பவத்தால் போர்களமாக மாறியதில், அங்கு பஸ்ஸிற்காக காத்திருந்த மக்கள்  அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினரை கண்டதும், தகராறில் ஈடுபட்ட மாணவர்கள் அங்கிருந்து சிதறி ஓட்டம் பிடித்தனர். அதன்பின்னர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் விமல் ராஜ்,ராகேஷ், புஷ்பராஜ், மோகன், தவசி, தினேஷ் உள்ளிட்ட 6 மாணவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சில கல்லூரி மாணவர்களை தேடி வருகின்றனர்.