பல்லடம் அருகே பரபரப்பு...லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அருகே பரபரப்பு...லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை...

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே அறிவொளி நகர் பள்ளி வாசல் வீதியில் வசித்து வருபவர் யாசின். இவர் தனது மனைவி பர்வீன் மற்றும் ஒரு பெண் குழந்தையோடு வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று காலை லாரி டிரைவர் யாசின், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் வெளியில் சென்ற அவரது மனைவி, வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டது கதறி அழுத மனைவி, இது தொடர்பாக பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பல்லடம் போலீசார் இறந்தவர் உடலை கைப்பற்றி பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இது தொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார், யாசின் தற்கொலை முடிவுக்கு குடும்ப தகராறு காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.