ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மலம் கலந்த நீருடன் வேட்புமனுதாக்கல் செய்ய வந்த நபர்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மலம் கலந்த நீருடன் வேட்புமனுதாக்கல் செய்ய வந்த நபர்

ஈரோடு கிழக்கு தொகுதிஇடைத்தேர்தலில்  போட்டியிட  மலம் கலந்த நீருடன் பறையர் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலில் போட்டியிடபறையர் சங்கம் சார்பில் தற்பொழுதுபுதுக்கோட்டை வேங்கை வயலில் இருந்து மலம் கலந்த நீரை எடுத்துக் கொண்டு அதன் ஒருங்கிணைப்பாளரும்வேட்பாளருமான பிரபாகரன் தற்போது வேட்பு மனு தாக்கல் செய்ய வந்துள்ளார் ஆனால் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி  மலம் கலந்த நீருடன் செல்ல அனுமதிக்க  மாட்டோம்என்றுதடுத்து நிறுத்தி வருகின்றன இதனால் அவர்களுக்கும் போலீஸாருக்கும் தற்பொழுது வாக்குவாதம் ஏற்பட்டுவருகிறது

மேலும் படிக்க| துருக்கி, சிரியா பேரழிவால் மிகுந்த வேதனை அடைந்தேன் - முதலமைச்சர்

இந்த மலம் கலப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளிகளை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை எனக் கூறி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தற்பொழுது வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக அவர் கூறினார்