எண்ணூர் கடலில் மூழ்கி 2 பேர் பலி : குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி பரிதாபம்

திருவொற்றியூர், சென்னை,எண்ணூர் ராமகிருஷ்ணா நகர் கடலில் நண்பர்களுடன் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் இருவர் ராட்சத அலையில் சிக்கி பலியானார்கள்.

எண்ணூர் கடலில் மூழ்கி 2 பேர் பலி : குளிக்கும்போது ராட்சத அலையில் சிக்கி பரிதாபம்

தெற்கு அந்தமான், தாதெர் கிராமத்தை சேர்ந்தவர் ஜமாலுதீன், மகன் ஷாயின் சா வயது (20). இவர், பூர்வீகம் கேரள மாநிலம் ஆகும், சென்னையில் தங்கியிருந்து,வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில்,முதலாம் ஆண்டு பி.ஏ. டிபன்ஸ் படித்து வந்தார், எண்ணூர், அனல் மின் நிலைய குடியிருப்பு பகுதியை சேர்ந்த நண்பர் சஞ்சய் வீட்டிற்கு, ஷாயின் சா வந்தார், அவர்களுடன், சில நண்பர்களும் இருந்தனர்.

இந்த நிலையில், மதியம் அனைவரும் ,சஞ்சய் வீட்டில் சாப்பிட்டனர். மதியம், தாழங்குப்பம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு கடலில் இறங்கி குளித்தனர், அப்போது,ஷாயின் சாவை கடல் அலை இழுத்து சென்றன. உடனே நண்பர்கள், மயங்கிய நிலையில் இருந்த ஷாயின் சாவை காப்பாற்றி,  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், ஆனால்,அவர் வழியிலேயே இறந்து விட்டதாக ,மருத்துவர்கள் தெரிவித்தனர், இது தொடர்பாக எண்ணூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதைப் போன்று,கொருக்குப்பேட்டை,ஐ.ஓ.சீயை சேர்ண்டவர் அஜய் (17), இவர், ராமக்கிருஷ்ணா நகர் கடலில் குளித்துக்கொண்டிருக்கும் போது ராட்சத அலையில் சிக்கி கடலில் இழுத்துச் செல்லப்பட்டு பின்னர் மூன்று மணி நேரம் கழித்து அவரது உடல் கரை ஒதுங்கியது உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

ஒரே நாளில் இரு வேறு இடங்களில் கல்லூரி மாணவர் மற்றும் இளைஞர் உயிரிழந்தது பகுதியில் மிக சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மெரினா கடற்கரையில் பொது மக்களை அனுமதிக்காத நிலையில் திருவொற்றியூர் எண்ணூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரையில் ஏராளமானோர் பொதுமக்கள் மற்றும் வந்து இளைஞர்கள் குளிப்பதை காவல்துறையினர் தடுத்து நிறுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.