பாஜகவுடன் உறவை முடித்துக்கொள்கிறேன் - திருச்சி சூர்யா சிவா

கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம். வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் எனவும் பாஜகவுடனான உறவை முடித்துக்கொள்கிறேன்

பாஜகவுடன்  உறவை  முடித்துக்கொள்கிறேன் - திருச்சி சூர்யா சிவா

திருச்சி சூர்யா சிவா

திமுகவின் எம்.பி திருச்சி சிவா அவர்களின் மகன் சூர்யா சிவா இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாஜகவில் இணைந்தார். பாஜகவில் இணைந்த கையோடு குடும்பக்கட்சிகளுக்கு பணி செய்ய பிடிக்கவில்லை. சுதந்திரமாக செயல்படவே பாஜகவில் இணைந்தேன் என கூறினார்.

 மேலும் படிக்க |புரட்சியாளர் அம்பேத்கருக்கு செம்மாந்த வீரவணக்கம்

பாஜக உட்கட்சி பூசல்

பாஜகவில் திருச்சி சூர்யாவும், டெய்சியும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் திட்டிக்கொண்ட ஆடியோ கசிந்து பாஜக கட்சியினரிடையில் சர்ச்சையை ஏற்படுத்தியது.  சர்ச்சைகளுக்கு பிறகு கட்சியின் தலைமையிடத்தில் பேசிவிட்டு இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்து டெய்சியும் சூர்யா சிவாவும் அக்கா தம்பி போல தான் பேசிக்கொண்டோம் என தெரிவித்தனர்.

 

மேலும் படிக்க | நிலுவையில் இருக்கும் ஊதியம்.. தமிழ்நாடு அரசிற்கு சீமான் அறிக்கை

பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன்

அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி . இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் .

அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும் . இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி  சூர்யா சிவா என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.