கொடிகட்டி பறக்கும் கட்டப்பஞ்சாயத்தை அடக்க களமிறக்கப்பட்டார் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்...

சென்னை புறநகர் பகுதிகளில் ரவுடிகளை வேட்டையாட என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளத்துரை களமிறக்கம்.

கொடிகட்டி பறக்கும் கட்டப்பஞ்சாயத்தை அடக்க களமிறக்கப்பட்டார் என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்...

சென்னை புறநகர் பகுதிகளில் கொடிகட்டி பறக்கும் கட்ட பஞ்சாயத்து, மாமூல் வசூல் ஆகியவற்றை ஒடுக்குவதற்காக, என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என அழைக்கப்படும் கூடுதல் எஸ். பி. வெள்ளத்துரை தலைமையில் சிறப்பு படை அமைக்கப்பட்டுள்ளது.

தொழில் நிறுவனங்கள் நிறைந்த பகுதியில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபடும் ரவுடிகளை ஒடுக்க வெள்ளத்துரை நியமனம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. தற்போது திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் எஸ். பி.யாக பணியாற்றி வரும் இவர், தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவரும், வடதமிழகத்தை கலக்கி வந்த வீரமணி, பங்க் குமார் உள்பட பல முக்கிய ரவுடிகளை என்கவுண்ட்டர் செய்தவரும் ஆவார். மனித உரிமை மீறல்கள் தொடர்பான பல வழக்குகள், வெள்ளத்துரை மீது நிலுவையில் உள்ளன என்பது குறிப் பிடத்தக்கது.