போதைப்பொருள்களை பயன்படுத்தி ஆபாச நடன நிகழ்ச்சி நடத்திய 11 பேர் கைது...
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே தனியார் ரிசார்ட்டில் போதைப்பொருள்களை பயன்படுத்தி ஆபாச நடன நிகழ்ச்சி நடத்திய 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
கர்நாடக - தமிழக எல்லையான ஆனெக்கல் அடுத்துள்ள தனியார் ரிசார்ட்டில் இசை மற்றும் நடன நிகழ்ச்சி நடந்தது. இந்த நடன நிகழ்ச்சியில் பெங்களுரு பகுதியில் வேலைபார்த்து வரும் ஐடி பணியாளர்கள், மாணவர்கள், பெண்கள் என 40 பேர் கலந்து கொண்டனர்.
இவர்கள் இரவில் மது மற்றும் போதைப்பொருள்களை பயன்படுத்தி ஆபாச நடனம் ஆடியதாக
ஆனெக்கல் காவல்துறையினருக்கு ரகசிய கிடைத்தது.இதையடுத்து தனியார் ரிசார்ட்டிற்கு சென்ற போலீஸார் அங்கு நடனமாடிகொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது அங்கிருந்த பெரும்பாலானோர் தப்பியோடிய நிலையில் ஒரு பெண் உள்பட 11 பேர் போலீஸாரிடம் சிக்கினர். இதனையடுத்து 11 பேரையும் கைது செய்த போலீஸார் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும் இந்த ஆபாச நடன நிகழ்ச்சியில் பங்கேற்று தப்பியோடியமற்றவர்களை போலீஸார் வலைவீசி தேடிவருகின்றனர். அவர்கள் பயயன்படுத்திய மதுபானபாட்டில்கள் மற்றும் போதைப்பொருள்கள் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்