சத்தியமங்கலம் அருகே குட்டிகளுடன் சாலையைக் கடக்கும் யானைகள்.. வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க எச்சரிக்கை!!

சத்தியமங்கலம் அருகே, யானைகள் அதன் குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக சாலையைக் கடப்பதால், வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்கவேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

சத்தியமங்கலம் அருகே குட்டிகளுடன் சாலையைக் கடக்கும் யானைகள்.. வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க எச்சரிக்கை!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன.

இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி சாலையை கடப்பதும், சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும் வழக்கம். இந்நிலையில் ஆசனூர் வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய யானைகள் சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொண்டு விட்டு ஆசனூர் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்து சென்றன.

அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள சாலை என்பதால் வனவிலங்குகள் சாலையை கடப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே,  அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை கவனத்துடன் இயக்குமாறு வனத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.