மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு- தோட்டத்து உரிமையாளர் தலைமறைவு

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே மின் வேலியில் சிக்கி மக்னா யானை உயிரிழந்தது.

மின்வேலியில் சிக்கி யானை உயிரிழப்பு- தோட்டத்து உரிமையாளர் தலைமறைவு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், சத்தியமங்கலம், பவானிசாகர், விளாமுண்டி கடம்பூர்,தாளவாடி, ஆசனூர், தலமலை, கேர்மாளம், டி.என்.பாளையம்,ஜுர்கள்ளி  ஆகிய 10 வனச்சரகங்கள் உள்ளன. இந்த வனச்சரகங்களுக்கு உள்பட்ட வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, காட்டெருமை, மான், செந்நாய் போன்ற வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இதற்கிடையில் உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் அடிக்கடி விளைநிலங்களுக்குள் புகுந்து நாசம் செய்வது தொடர் கதையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் இக்கிராமத்தை சேர்ந்த விவசாயி ஜேம்ஸ் என்பவர், விவசாய நிலத்தில் உருளைக்கிழங்கி பயிரிட்டுள்ளார். காட்டுபன்றி, மற்றும் யானைகளிடம் இருந்து விளைநிலத்தை பாதுக்காக அங்கு மின்வேலியும் அமைத்துள்ளார். இதற்கிடையில் நேற்று இரவு ஜீரகள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை விவசாயி ஜேம்ஸ் விளை நிலத்தின் உள்ளே புகுந்த பொழுது மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது.

இது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 30 வயதுமிக்க மக்னா யானை, உணவு தேடி வந்தபோது மின் வேலியில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர் . மேலும் தலைமறைவான தோட்டத்து உரிமையாளரை ஜேம்ஸை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.