மின்கம்பத்தை சரிசெய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு மின்வாரிய ஊழியர்: ஆடியோ வெளியாகி பரபரப்பு...

சிவகங்கை மாவட்டம் ஒக்கூர் அருகே மழை காரணமாக சரிந்த மின்கம்பத்தை சரிசெய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு மின்வாரிய ஊழியர் பேசிய ஆடியோ  வெளியாகியுள்ளது.

மின்கம்பத்தை சரிசெய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு மின்வாரிய ஊழியர்: ஆடியோ வெளியாகி பரபரப்பு...

ஒக்கூரை அடுத்த அண்ணநகரைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர் விவசாய நிலத்திற்கு மின்சாரம் அளிக்கும் மின் கம்பம் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் முறிந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மின் கம்பங்களை மாற்றி தருமாறு முத்துராமன் மனு அளித்தும் எந்தவித பதிலும் இல்லாமல் மின்வாரிய ஊழியர்கள் அலைக்கழித்து வந்துள்ளனர். இதுகுறித்து மின்வாரிய ஊழியர் ஒருவரிடம் தொடர்பு கொண்டு பேசிய போது 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வழங்கினால் மட்டுமே மின்கம்பத்தை மாற்ற முடியும் என தெரிவித்தார். இந்த ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது.