12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்...!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடங்குகிறது.

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடக்கம்...!

தமிழகம் முழுவதும் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மாதம் 5 ஆம் தேதி தொடங்கி 31 ஆம் தேதி வரை நடைபெற்றது. தேர்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி இன்று தொடங்குகிறது.

வரும் 8-ஆம் தேதிக்குள் விடைத்தாள் திருத்தும் பணியை முடிக்க அரசு தேர்வுகள் இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், 90 லட்சம் விடைத்தாள்களை 9 நாட்களில் திருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்து வரும் 23ஆம் தேதி 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.