" அந்த '5' பைகளை வைத்துதான் எடப்பாடி அதிமுகவை தனது கைக்குள் வைத்துள்ளார்..! ”

"  அந்த  '5' பைகளை வைத்துதான்  எடப்பாடி அதிமுகவை தனது கைக்குள் வைத்துள்ளார்..!  ”

கொடநாடு பங்களாவில் இருந்து கொண்டுவரப்பட்ட கோப்புகளைக் கொண்டுதான் எடப்பாடி பழனிச்சாமி கட்சியை கைபற்றியுள்ளார் என்று கனகராஜின் சகோதரர் தனபால் தெரிவித்துள்ளார். 

வெளிநாட்டில் கொடநாடு பங்களாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 5 பைகளை கொண்டுதான் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார் என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபால் தெரிவித்துள்ளார்.

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜின் சகோதரர் தனபாலை விசாரிக்க சிபிசிஐடி போலீசார் நீலகிரி நீதிமன்றத்தில் அனுமதி பெற்றுள்ளது. 

இந்த நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த தனபால், 

“ சிபிசிஐடி விசாரணைக்கு ஒத்துழைக்க தயார்; என்ன நடந்தது என்பதை எந்த நேரத்திலும் சொல்ல தயாராக உள்ளேன்”,  எனவும் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு காவல்துறையை விட சிபிசிஐடி போலீசார், விசாரணையை துரிதமாக செயல்பட்டு வருவதாக தெரிவித்த அவர், ”தன்னை யாரும் இயக்கவில்லை; நான் தனியாகத்தான் இயங்குகிறேன்”, என்றார். 

மேலும் கொடநாடு பங்களாவில் இருந்து கொண்டுவரப்பட்ட 5 பைகள் சேலத்தில் எடப்பாடி பழனிச்சாமியின் மைத்துனர் வெங்கடேசனிடம் 3 பைகளும்; சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவனிடம் 2 பைகளும் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் அந்த 5 பைகளை கொண்டுதான் அதிமுகவை தன் கட்டுப்பாட்டிற்குள் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்ததாக தெரிவித்துள்ளார். அந்த 5 பைகளில்தான் அனைத்து முன்னாள் அதிமுக அமைச்சர்களின் ஆவணங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் கொடநாடு வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, எடப்பாடி பழனிச்சாமியின் மைத்துனர் வெங்கடேசன், சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகிய 5 பேரை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இதையும் படிக்க    |  அதிமுக ஊழல் பட்டியலை அண்ணாமலை வெளியிடுவாரா? சீமான் கேள்வி!