சென்னை மாநகரை சீரமைத்ததாக கூறி ஊழல் செய்த எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வேண்டும்...புகழேந்தி

சென்னை மாநகரை சீரமைத்ததாக கூறி, ஊழல் செய்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகரை சீரமைத்ததாக கூறி ஊழல் செய்த எடப்பாடி பழனிசாமியை கைது செய்ய வேண்டும்...புகழேந்தி

சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அதி முக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி கூறுகையில், 

தேர்தல் நேரத்தில் எடப்பாடி பழனிச்சாமி சொன்னது அனைத்தும் பொய் என கூறினார். மேலும் ஓ.பி.எஸ் மீது எனக்கு கோபம் இல்லை; ஆனால் கொள்ளையடிப்பவரை முதல்வராக அறிவித்தது ஓபிஎஸ்தானே என்றார். 

தற்போதைய தலைமை நீடிக்கும் வரை அ.தி. மு.க ஜீரோதான் என்ற அவர் சேலம், கோவையில் அதி முக காணாமல் போகும் என்றார். கடந்த ஆட்சியில் மத்திய, மாநில அரசுகளின் நிதியில் நடைபெற்ற ஊழல்களுக்கு என்னிடம் ஆதாரம் உள்ளது எனவும் தெரிவித்தார்.

கொடநாடு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வெறும் ரைடு விட்டால் ஜாலியாக சந்திக்கின்றனர் என தெரிவித்தார்.