மாலைமுரசு செய்தி எதிரொலியால் பொதுமக்கள் நிம்மதி.. 10 நாட்களாக சாலையில் பொங்கி வழிந்த கழிவுநீர் சுத்தம்!!

மாலைமுரசு செய்தி எதிரொலியால் பொதுமக்கள் நிம்மதி.. 10 நாட்களாக சாலையில் பொங்கி வழிந்த கழிவுநீர் சுத்தம்!!

மாலை முரசு செய்தி எதிரொலியாக, சென்னை கொரட்டூரில் சாலையில் பொங்கி வழிந்த கழிவு நீரை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்தனர்.

சென்னை, கொரட்டூரில் குடியிருப்பு பகுதியில் பாதாள சாக்கடை மூடிகள் வழியாக கழிவு நீர் பொங்கி வழிந்தது. 10 நாட்களுக்கும் மேலாக, தொடர்ந்து சாலையில் தேங்கிய கழிவுநீரால், அப்பகுதி மக்களுக்கு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.

இது தொடர்பான செய்தி நமது மாலைமுரசு தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை அடுத்து, மாநகராட்சி ஊழியர்கள் கழிவு நீர் பொங்கி வழியும் பாதாள சாக்கடையை உடனடியாக சரி செய்தனர். இதைத்தொடர்ந்து, செய்தி வெளியிட்டு கழிவு நீர் பிரச்சனைக்கு தீர்வு காண உதவிய மாலைமுரசு தொலைக்காட்சிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.